மும்பை :

ஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் களம் இறங்க இருக்கின்றனர்.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

வரும் 23ந்தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெறுகிறது.

, 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் மார்ச் 25-ந் தேதியும் தொடங்குகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.  இந்த ஆட்டம் மும்பையில் வருகிற 17-ந் தேதி ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி தேர்வு மும்பை யில் இன்று நடைபெற்றது. தேர்வு குழுவினர் கூடி 16 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தனர்.

இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரது தலைமையில், விஜய், புஜாரா, ரகானே, சகா, அஸ்வின், ஜடேஜா, புவி, உமேஷ், கருண், ஜெயந்த், குல்தீப், முகுந்த், பான்டியா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:-

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹோன்ட்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஸ்டீன் ஓகீபே, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், ஆஷ்டன் அகர், உஸ்மான் கவாஜா, ஜாக்சன் பிர்ட், மிட்செல் செப்சன், மேக்ஸ்வெல்.