தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில், நாடாளுமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.
அங்கு இப்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அவையில் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அனுவாத் என்ற எம்.பி. தனது செல்போனில் ஆபாச படத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.

முகக்கவசம் அணிந்திருந்த அந்த எம்.பி. கால் மேல் கால் போட்டு, யாருக்கும் தெரியாமல் சுமார் 10 நிமிடங்கள் ஆபாச படம் பார்த்த படி செல்போனில் மூழ்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அதனை கவனிக்க வில்லை.

ஆனால் அவர் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் பதறிப்போன அந்த எம்.பி., செல்போனில் படம் பார்த்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
என்ன விளக்கம்?
’’ பண உதவி கேட்டு எனக்கு சில பெண்கள் மெசேஜ் அனுப்பி இருந்தனர். அவர்கள் உண்மையிலேயே கஷ்டத்தில் உள்ளனரா? என்பதை அறிய அவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை செல்போனில் பார்த்தேன். ஆனால் அவர்கள் வேறு மாதிரி ஆட்கள் என பின்னர் தெரிந்து கொண்டேன்.

எனவே அந்த பெண்களின் புகைப்படங்களை அழித்து விட்டேன்’’ என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார், அனுவாத் எம்.பி. அனுவாத் மீது எந்த எம்.பி.யும், புகார் கொடுக்காததால், அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

-பா.பாரதி.