சென்னை

மலஹாசனின் டிவிட்டர் பதிவுகளை புரிந்துக் கொள்ள கோனார் உரை தேவை என தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் சமீப காலமாக தனது டிவிட்டரில் பல அரசியல் செய்திகளையும்,  சமூக நலச் செய்திகளையும் பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.  அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில் நெட்டிசன்கள் பலர் அவரது ட்வீட்டுகளை புரிந்துக் கொள்ள மிகவும் கடினமாக உள்ளதாக கருத்துக்கள் வெளியிடுகின்றனர்.   அவரது ட்வீட்டுகளை வைத்து நெட்டிசன்கள் அவரைக் கிண்டல் செய்வது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில் கமலஹாசன் ட்வீட்டுகளைப் பற்றி பா ஜ க வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.  அவர், “கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் புரியாதது போலவே கருத்துக்களை இடுகிறார்.  அவர் ட்விட்டர் பக்கத்தை புரிந்துக் கொள்ள கோனார் உரை வந்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறி உள்ளார்.