சென்னை: சென்னையில் கோயிலின் அருகில் அசைவ உணவு விற்கப்படுவதால் மந்தைவெளி தண்டு மாரியம்மன் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதியாக இருப்பது மந்தைவெளி. இங்குள்ள மார்க்கெட் அருகில் தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வாயிலில் இப்போது ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கோயிலின் அருகினிலே அசைவம் சமைத்து, விற்பதனால், அதனால் ஏற்படும் தர்ம சங்கடங்களால் கோயில் மூடி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோயில் அருகில் அசைவம் சமைக்கப்படுவதால், குருக்கள், பக்தர்கள் வர தயங்குகிறார்கள். இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டு இருந்த நிலையில், அருகில் அசைவம் சமைக்கப்படுவதால் இன்று முதல் தற்காலிகமாக பூட்டப்பட்டு உள்ளது.