விஷால் – ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘திமிரு’ படத்தை இயக்கியவர் தருண்கோபி.
‘வெறி’ ‘அருவா’ படத்தின் பின் தயாரிப்பு வேலைகளும் நடந்து வருகின்றன.
இந்த இரண்டு படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில் ‘யானை’ என்ற தனது அடுத்த படத்தை தருண்கோபி இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.
‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நாயகி இன்னும் தேர்வாகவில்லை .