லைஞர்…. ஆம்… கலைஞர் கருணாநிதி… திருக்குவளை கருணாநிதி… திமுக தலைவர்…  20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்…இன்றைய உலகின் சகாப்தம்….  இலக்கியவாதி… சீர்த்திருத்த வாதி…  5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த  ஒப்பற்ற தலைவர்…  அவருக்கு இன்று 95வது அகவை பிறந்துள்ளது.

60 ஆண்டுகள் அரசியல் களத்தில் ஓய்வறியாது பணியாற்றி வந்தவர் கருணாநிதி… இந்த பெயர் இந்திய வரலாற்று சுவடுகளில்  செதுக்கப்பட்டு உள்ளது.… தமிழக அரசியல் மட்டுமல்லாத இந்திய அரசியலிலும், தமிழகத்தை சேர்ந்த கர்மவீரர் காமராஜருக்கு பிறகு…. ஒரு வலிமையான  சக்தியாக இருந்து கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி…..

இன்று 90வது பிறந்தநாள் கொண்டாடும்… அவரிடம் ஆசிகளை பெற  இளைய சமுதாயத்தினர்  அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்… கோபாலபுரத்தில் அவரது தரிசனத்துக்காக ஏங்கி தவமிருக்கிறார்கள்… அந்த ஒப்பற்ற தலைவன் குறித்து ஒரு சில தகவல்களை இங்கே காணலாம்…

தமிழக அரசியல் களத்தில் ‘கருணாநிதி யார்’ என நாடு முழுவதும் அவரது பெயரி பிரதிபலிக்க வைத்தது….  கல்லக்குடி போராட்டம்தான். 1953 ஆம் ஆண்டு டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு மீண்டும் கல்லக்குடி என்று பெயர் சூட்டக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து கருணா நிதி மேற்கொண்ட போராட்டம் அவருக்கும் திமுகவுக்கும் பெரும் புகழைத் தேடித் தந்தது.  அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது.

அப்போதைய தலைவர்கள்  ராஜாஜி முதல்,   டி பிரகாசம் , ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி… இன்னும் மவுனமாக தனது அரசியல் நகர்வுகளை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மூலம்  செய்து வருகிறார்.

தமிழக மக்களால்  அன்போடு   “கலைஞர்” என்று அழைக்கப்படும் கருணாநிதி,,,, . தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார்.

தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு பங்களிப்பை உருவாக்கியவர். திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியவர்.

சங்கத் தமிழ் என்னும் நூல் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நூல்களில் பிரசித்தி பெற்றது.  இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதி சாதனை படைத்தவர்.

சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும்,   சீர்திருத்தத்திற்காகவும் போராடியவர்.

1924ம் ஆண்டு  திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஜூன் 3ம் தேதி பிறந்த கருணாநிதி,  1942ம் ஆண்டு , ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று  முதன்முதலாக ‘முரசொலி’ என்ற பத்திரிகையை நிறுவி கட்சியின் அறிவிப்புகளை வெளியிட்டு முத்திரை பதித்தார்.

1957ம் ஆண்டு முதன்முதலாக  மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்,  1961 ம் ஆண்டு  திமுக கட்சியின்  பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962ம் ஆண்டு  தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967ம் ஆண்டு திமுக ஆட்சியில்  அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969ம் ஆண்டு  முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.

1970ம் உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக திகழ்ந்தார்.

1971ம் ஆண்டு 2வது முறையாக தமிழக  முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு 1989ம் ஆண்டு மற்றும் 1991ம் ஆண்டு, 1991ம் ஆண்டும் மீண்டும்  3வது முறையாக முதல்வராக பதவி வகித்தார்.

1996ம் ஆண்டு 4வது முறையாக பதவி ஏற்றும்,  5வதுமுறையாகத 2006ம் ஆண்டு  தேர்தலில் வெற்றிப்பெற்று, மீண்டும் முதல்வராகி சாதனை படைத்தார்.

பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் ஏராளமான இலக்கிய நூல்களை அவருக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். அதுபோல ஏராளமான திரைப்படங்களுக்கும் கதை வசனம் மற்றும் பாடல்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார்.

பிரபலமான விடுதலைப்போராட்ட வீரர்களான  பொன்னர் சங்கர் முதல் இளைஞன் வரை ஏராளமான திரைப்படங்களில் கதை வசனம், பாடல் போன்ற பணிகளில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.

கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம். இந்த படத்தில், ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலை’ என்று வசனம் எழுதி பரபரப்பூட்டியவர்.

இவரது பெரும்பாலான கதைகள் அனைத்தும், மக்களை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபடும் நோக்கிலேயே இருந்தன.

குறிப்பாக,   ‘விதவை மறுமணம்’,  ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’,  ‘மத பாசாங்குத் தனத்தை ஒழித்தல்’,  ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும்.

பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்து, தமிழக  மக்களிடையே நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் என்ற நவரச நடிகைரை பிரபலப்படுதினார்.

எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்ததும் கருணாநிதிதான்.

கலைஞரின் நற்பணிகளை பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  அவற்றில் சில….

  • அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கவுரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
  • தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கவுரவித்தனர்.
  •  தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.
  • உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின்முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

அதேவேளையில் கருணாநிதியின் பொன்மொழிகளும் பிரசித்தி பெற்றவை.

நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும். புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.”

உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.

“பதவி என்பது முள்கிரீடம் போன்றது!” இதுபோன்று ஏராளமான தத்துவ பொன்மொழிகளை உலக மக்களுக்கு வாரி வழங்கி உள்ளார்.

சட்டபேரவையில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று, தலை இருத்து பூ இல்லா விட்டால் நாணயத்திற்கு மதிப்பில்லை அதுபோன்று எதிர்கட்சிகள் இல்லா அவை முழுமைடையாது என்பது முதல்வராக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியவை.

அவர் அன்று பேசியது இன்றைய சட்டமன்றத்திற்கும் பொருந்துகிறது…

உடல் ஊனமுற்றோர்களை மாற்றுத் திறனாளிகள் என அங்கீகாரம் குடுத்தவர் கருணாநிதி.

பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், இதுவரை ஒருமுறைகூட  நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

பங்சுவாலிட்டி எனப்படும் நேரம் தவறாமை கருணாநிதியின் நற்பண்புகளுக்கு சான்று. எந்தவொருஅரசு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஆஜராவது அவரது வழக்கம்.

இவ்வளவு பிரசித்தி பெற்ற ஒரு தலைவரேயே கடந்த 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனே நள்ளிரவு கைது செய்தது உலகம் முழுவதும் பெரும்  பரபரப்பாக பேசப்பட்டது. நாட்டின் மூத்த முதுபெரும் தலைவரை நள்ளிரவு மூர்க்கத்தனமாக கைது செய்ததாக ஜெ.வையும், காவல்துறையினரையும் அனைத்து தரப்பினரும் வசை பாடினார்கள்.

தற்போது உடல்நலமில்லாத நிலையிலும், உள்ளத்தின் தைரியத்தோடு  வாழ்ந்து கொண்டிருக்கும்… ஒப்பற்ற தமிழினத் தலைவர் மென்மேலும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்…

இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் இன்று… அவரின் ஆசியை பெறுவோம்….