சென்னை:

நீட் தேர்வு எழுதுவதற்கான  வயது உச்சவரம்பை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம்  தள்ளுபடி செய்து  உத்தர விட்டது.

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பு குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்த மாதம் 22ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுப் பிரிவினரின் வயது  25 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், மனுமீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  சி.பி.எஸ்.இ.யின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினர்.

மேலும் இதுபோன்ற வழக்குகளுக்கு உயர்நீதி மன்றங்களை நாடலாம் என்றும் கூறினர்.