திருச்சி:

பத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும்  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளர்.

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக மீட்பு பணி நடைபெற்ற வருகிறது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.

ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.

ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.

இவ்வாறு கூறி உள்ளார்-