ஐதராபாத்,

பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிதந்தவர்  பி.வி. சிந்து.

ஆந்திராவை சேர்ந்த சிந்துவுக்கு   ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், தலைநகர் அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது.

இதற்கிடையே 22 வயதான பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவியும் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது. இதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதன் காரணமாக அவர் விரைவில் துணை கலெகடராக நியமிக்கப்படுவார்.

சிந்து  தற்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் துணை மேலாளராக பணியாற்ற வருவது குறிப்பிடத்தக்கது..