டிகர் ரஜினிகாந்த் மீது திரைப்பட பைனான்ஸியர் போத்ரா தொடுத்திருக்கும் வழக்கின் விசாரணை இன்று மதியம் நடக்க இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா, பண விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நேற்று ஜார்ஜ் டவுண் 8 வது நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி காந்த் தரப்பில் 8 வழக்கறிஞர்கள் கும்பலாக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இதனால் அதிர்ந்த நீதிபதி, விசாரணையை மறுநாளுக்கு (இன்று) ஒத்தி வைத்துவிட்டார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்குறிப்பிட்ட வழக்கு விசாரணை நடக்க இருக்கிறது.