சென்னை:

மிழகத்தில் எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்கை மாவட்ட  சிறப்பு நீதிமன்றங்கள் 6 மாதத்திற் குள் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்களை விசாரிக்க உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிற மாவட்ட எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் விசாரிக்கும் எனவும், மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர்நீதி மன்றம் பதிவுத்துறை உத்தரவிட்டது

அதில்,  சிறப்பு நீதிமன்றங்கள், எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை தினம்தோறும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும்,  வழக்குகளை விசாரித்து வரும் மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாதந்தோறும் அதுகுறித்த விவரங்களை அறிக்கையாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.