சென்னை:

த்தியில் மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணைக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எக்சிட் போலை நம்ப வேண்டாம் எனற்வர்,  மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

பல நேரங்களில் கருத்துக்கணிப்பு அப்படியே நடந்துவிடாது; 2004-ல் கருத்துக்கணிப்பு படி தேர்தல் முடிவு அமையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில்,  ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்திருப்பது கவலையளிக்கிறது, இதனால் பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு வைகோ கூறினார்.