சென்னை: அரசியல் கட்சியையை ஜனவரியில் தொடங்கப்போவதாக அறிவித்து, 3 ஆண்டுகால ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்று அதிரடியாக கூறினார்.

ரஜினி இன்று மதியம்,  தனது போயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, “2017 டிசம்பர் 31இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். எழுச்சியை உண்டாக்கிய பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தேன். கொடுத்த வாக்கிலிருந்து என்றுமே தவற மாட்டேன். கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது உங்களுக்கு பெரிய ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினர்.  கொரோனா வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். அதனால், மருத்துவர்கள் அறிவுரையின் பேரில்  என்னால் மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை.

நான் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூருக்கு சென்று வந்தது தமிழக மக்களிடன் பிரார்த்தனையால் தான். தற்போது  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அவசியம் தேவை. அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை. எல்லாவற்றையும் மாற்றம் வேண்டும். இதில் நான் ஒரு சின்ன கருவி. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாற்றம் நடக்க வேண்டும்.

என்னுடைய பாதையில் வெற்றியடைவேன்  என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு தலையெழுத்து உள்ளது. நாட்டுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிறது. அதுபோல தமிழ்நாட்டு தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நான் வெற்றி அடைந்தால் அது மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி.  தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோஷம்தான். ஆட்சி மாற்றம் நடக்கும் அரசியல் மாற்றம் நடக்கும். மாற்றத்துக்கு மக்கள் அனைவரும் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், எனது அண்ணாத்த பட ஷூட்டிங் மட்டும் நான் முடித்துக்கொடுக்க வேண்டியுள்ளது. இன்னும் 40 சதவீதம் ஷீட்டிங் உள்ளது என்றவர் தமிழருவி மணியன் எனது கட்சியின் மேற்பார்வையாளர் என அறிவித்தார்.

முன்னதாக, ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31ல் தேதி அறிவித்திருந்தார். ரஜினியின் டிவிட்டர் பதிவு டிரெண்டங்காகி உள்ளது.