நாகர்கோவில்,

து போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இவர் போதைக்கு அடிமையானதால் மன நோயாளியாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரைவிட்டு பிரிந்து மனைவி மற்றும் குழந்தைகள் தனியே வாழ்ந்து வருகிறார்கள். அவரது மகன் வினுவுக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று செல்வராஜின் மகன் வினு முழு போதையில், தனது தந்தை செல்வராஜ் குடியிருந்து வரும்  வீட்டுக்கு வந்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வினு தனது தந்தையின் கழுத்தை  அறுத்து கொலை செய்துள்ளார்.

கழுத்து அறுக்கப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானர். வினுவை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெற்ற மகனே போதையின் காரணமாக அப்பாவை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.