திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதிய பெண்மணி ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 88 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், 70 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி, கடந்த மே மாம் 27-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சியில்  ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.