நம்மிடம் இருக்கும் தேவையற்ற பொருட்களை, தேவை இருப்பவர்களுக்கு அளித்து உதவும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புச்சுவர் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக அன்புச்சுவர் என்ற புதிய திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்தார்.

மக்கள், தங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், உள்ளிட்டவற்றை தேவை இருப்போருக்கும் கொடுத்து உதவும் திட்டமே இது.

இத்திட்டத்துக்கு உள்ள வரவேற்பை பொறுத்து இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தாமிரபரணி தூய்மைப் படுத்தும் திட்டம், விளம்பரம் இல்லாத அரசு சுவர்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கடந்த இரு மாதங்ளில் நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.