16-1463370326-rajesh-lakhani-12-600
சென்னை: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று காலை முதல் நபராக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில்  பொதுமக்களும்,  பல துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பிக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் சென்னை அரும்பாக்கம் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அதேபோல் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகனும் முதல் நபராக  சென்னையில் வாக்களித்தார்