மதுரை:

கொரோனா பாதிப்பு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், உயிரிழந்த நிலையில், அவரது உடல் அதிகாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுதான் தமிழகத்தில் நடந்த முதல் உயிரிழப்பு.

இந்த நிலையில், உயிரிழந்த நபரின் உடல், அதிகாலை 4.30 மணிக்கே பலத்த பாதுகாப்புடன், அவரது குடும்ப உறுப்பினர் 4 பேர் முன்னிலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.