சென்னை,

மிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தில் வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறி ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.

இன்று காலை  தலைமை செயலகம் வந்த ஆளுநரை தமிழக சபாநாயகர், சட்டசபை செயலாளர் பூபதி வரவேற்று அழைத்துச் சென்றனர். சரியாக 10.00 மணிக்கு சட்டசபை அலுவலகம் வந்த அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன் கவர்னர் தனது உரையை தொடங்கினார்.

அப்போது, வணக்கம் என்றும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழில் வாழ்த்து கூறி தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்கத் தொடங்கினார்.