சென்னை:
சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை ஒப்படைக்க சுகாதார ஆய்வாளர் தசரதன் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

சுகாதார ஆய்வாளர் லஞ்சம் கேட்பது குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்திக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, உடலை ஈமச்சடங்கு செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். தோமையார்மலை சுகாதார ஆய்வாளர் தசரதன் மீதான புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கச் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார்.