அமெரிக்கா:

ந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவ்பீர் சிங் – சில்கி கைந்த் தம்பதி, அமெரிக்காவின் ஹில்ஸ்பரோ பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.

இந் நிலையில் தம்பதியருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேவ்பீர் சிங்கின் தந்தை ஐஸ்பிர்கல்சி மற்றும் தாய் பூபிந்தர் ஆகியோர் இந்தியா வில் இருந்து மகன் வீட்டுக்கு வந்தனர்.

தேவ்பீர் சிங் மற்றும் அவரது பெற்றோர், சில்கி கைந்த்தை தாக்கியிருக்கிறார்கள். இது குறித்து சில்கி கைந்த் அமெரிக்காவின் புளோரிடா மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சில்கியின் கணவர் மற்றும் அவரது தாய் தந்தையர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

காயமடைந்த நிலையில் இருந்த சில்கி கைந்த், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “ கடந்த ஒரு மாதமாகவே என் கணவர் மற்றும் மாமனார் மாமியார் என்னையும் என் குழந்தையையும் துன்புறுத்தி வந்தனர். காவல்துறையிடம் நான் புகார் தெரிவிப்பதாக கூறினேன். உடனே என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். வேறு வழியின்றி காவல்துறையிடம் புகார் செய்தேன்” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.