சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை சேர்ந்த ஏ. செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


அவர் திடீரென பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதியின் போராட்டத்துக்கு காரணம் என்ன?

அவரே சொல்கிறார்:
‘’ எங்கள் ஊரை சேர்ந்த செந்திலும், அவரது மனைவி பிரியதர்ஷினியும் கடந்த ஒன்றாம் தேதி தாக்கப்பட்டனர். கை எலும்பு முறிந்து செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன், மனைவியை தாக்கிய பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் அளித்து இன்றுடன் 22 நாள் ஆகிறது.

போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கவனத்துக்கு இந்த விவகாரத்தை நானே கொண்டு சென்றேன்.ஆனாலும் எந்த பலனும் இல்லை’. எனவே தான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்’’ என்றார், நீதிபதி செல்வம்.

-பா.பாரதி.