மாடலிங் தொழிலை விட்டு,  தன்னை விரட்ட முயற்சி நடப்பதாகவும், தமிழகத்தில் மாடலிங் தொழிலை ஒரு மாஃபியா கும்பல்  ஆட்டுவிப்பதாகவும் பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரபல மாடலிங் மீரா மிதுன்.  பிக்பாசில், நடிகர் சேரன் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர்.

மாடலிங், சினிமா என இயங்கிக்கொண்டிப்பதால் நகரவாசிகளுக்கு மீரா மிதுன் பிரபலமானவர். அவரது கவர்ச்சி படங்களை கண்டுகளிக்க பெரும் ரசிகர்கள்  கூட்டமே உள்ளது. சமீபத்தில் ஒரு பிரபலமான படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென நீக்கப்பட்டதால், கொதித்தெழுந்து, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு நியாயம் கேட்டிருந்தார்.

மேலும், அவ்வப்போது தனது  டிவிட்டர் பக்கத்தில்,  கிளாமரான படங்கள், வீடியோக்களை பதிவிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் தக்க வைத்து வந்தார். சமீப காலமாக அவரது பல செயல்கள் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பத்திரிகை.காம் இணைய இதழுக்கு மீரா மிதுன் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் மாடலிங் தொழிலை ஒரு கும்பல் ஆட்டிவிப்பதாக குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

தொடர் சர்ச்சைகளால் பிரபலமான மீரா மிதுன், தற்போது, தன்னை  மாடலிங் தொழிலை விட்டு விரட்ட முயற்சி நடப்பதாகவும், தமிழகத்தில் மாடலிங் தொழிலை ஒரு கும்பல் ஆட்டிவிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்  மீரா மிதுனின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

மீரா மிதுன் கூறும் கும்பல் யார் ? எதற்காக அவரது வளர்ச்சியை தடுக்கிறார்கள் ? என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்

மீரா மிதுனின் பிரத்யேக ஆடியோ பேட்டி…