சென்னை:

19ம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சிய பொறுப்பாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு  வாக்குப்பதிவு காரணமாக 25ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. இதை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில்,  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த  தேர்வு மே 19ந்தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய தினத்தில்  அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்  சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில், தேர்வு தேதி மாற்றி வைத்துள்ளது  டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை வரும் 19ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது இத்தேர்தலை கருத்தில் கொண்டும், ஒருசில நிர்வாக காரணங் களுக்காகவும், 19ஆம் தேதி அன்று நடைபெற இருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான எழுத்து தேர்வை 25.05.2019 அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

இந்த தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மையங்களில் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெறும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது