சென்னை:

மிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கடந்த மே மாதம் 31ந்தேதி  நிலவரப்படி 67.46 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் கடந்த  மே மாதம்  31-ஆம் தேதி நிலவரப்படி,  அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 46 ஆயிரத்து 903 ஆக உள்ளது.

இதில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 14 லட்சத்து 31 ஆயிரத்து 165 பேரும்,

19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 26 ஆயிரத்து 865 பேரும்,

24 முதல் 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 22 ஆயிரத்து 821 பேரும் உள்ளனா்.

மேலும், 36 வயது முதல் 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 57 ஆயிரத்து 284 பேரும்,

58 வயதுக்கு மேற்பட்டோா் 8 ஆயிரத்து 768 பேரும் பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.