பாட்னா,

ஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த முதியவர்  கொடுமையாக தாக்கப்பட்டு,  அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் நாலந்தா அருகில் உள்ளது அஜய்ப்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறவேண்டி அந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றார்.

அவர் அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி பெண்கள் இருவர் அவரை செருப்பால் கடுமையாக தாக்கினர். . மேலும், அவரது எச்சிலை அவரையே கட்டாயப்படுத்தி  நக்கவைத்த அதிர்ச்சகர சம்பவமும் நடந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த யாரோ ஒருவர், சமூகவலைதளத்தில் பதிவிட தற்போது அந்தக் காட்டி வைரலாகி வருகிறது. முதியவர் தாக்கி அவமானப்படுத்தப்பட்டதற்கு பலரும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவாக பதியப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து பல கண்டனக்குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.