தராபாத்தை சேர்ந்த இரண்டு பேர், வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 21 வயது பெண்ணை அங்கிருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அழைத்து வந்துள்ளனர். nஅவரை, ‘சிவப்பு விளக்கு’ பகுதியில் விற்று விட்டு மாயமாகி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டனர். ஆமதாபாத்தில் தனக்கு யாரையும் தெரியாது என அந்த பெண் கூறியதால்,அவரை காவல்நிலையத்திலே தங்க வைத்து ‘’பாதுகாப்பு’’ கொடுத்துள்ளனர், போலீசார்.

’பலான’ தொழிலில் இருந்து மீட்கப்பட்ட பெண், காவல் நிலையத்திலேயே ‘வாழ்க்கை’ நடத்தும் தகவல் அறிந்த ஆமதாபாத் நகர செசன்சு நீதிமன்றம், அதிர்ந்து போனது.

’’விபச்சார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணை, பெண்கள் காப்பகத்தில் சேர்க்காமல் , காவல்நிலையத்திலேயே அவருக்கு அடைக்கலம் அளித்தது ஏன்?’’ என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அந்த காவல்நிலைய விசாரணை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆமதாபாத் காவல்துறை ஆணையருக்கு உத்தவிட்டது.

 -பா.பாரதி