சென்னை:

நாளை  கடைசி சனிக்கிழமை என்பதாலும் தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை புத்த பூர்ணிமா காரணமாகவும் 3 நாட்கள் வங்கிளுக்கு தொடர் விடுமுறை நாள்காக உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் இன்றே தங்களது பணத்தேவைகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை செய்துகொள்வது உசிதமானது.

ஏற்கனவே பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவுக்கு பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ள நிலையில், 3 நாள் தொடர் வங்கி விடுமுறை காரணமாக மேலும்  பணப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே, தங்களது வங்கி தொடர்பான தேவைகளை இன்றே செய்துகொள்வது சிறந்தது. அடுத்த 3  நாட்களிலும் எந்தவித பரிவர்த்தனைகளும் நடைபெறாது.

இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.