சேலம்,

சேலம்  பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் அங்கு பஸ் ஏற வரும் மாணவிகளை கிண்டல் செய்து வந்தார். அதைக்கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை நைய புடைத்து அடித்து விரட்டினர்.

சேலத்தில் உள்ள அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில்  அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து மூலம் பள்ளிகளுக்கு  செல்வது வழக்கம். இதையறிந்த இளைஞர் ஒருவர் பஸ் நிலையத்தில் உள்ள மாணவிகளிடம் ஆபாசமாக கிண்டல் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலையும்,  பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்க  மாணவிகளை  அந்த இளைஞர்  ஆபாசமாக சைகை காட்டியபடி நின்றுள்ளார். மேலும் மாணவிகளின் அருகில் சென்ற அந்த நபர் கேலி கிண்டலும் செய்துள்ளார்.

இதன் காரணமாக மாணவிகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து அந்த பகுதியுள்ளவர்கள் பஸ் நிலையம் வந்து கிண்டல் செய்த இளைஞரை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.