சென்னை,

திமுகவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும், சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும்  இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக்குழு தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நாட்டில் ஆவியும், காவியும் ஆட்சி செய்து வருகிறது என்று கூறினார்.

அதிமுகவின் இன்றைய பொதுக்குழுவில் மறைந்த ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர், இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், அதிமுக உடைந்து வருவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்து வருகிறது என்றும், அதிமுகவில் ஜெயலலிதாதான்  நிரந்தர பொதுச்செயலாளர் என்று சொல்வது ஆவியும் காவியும் தான் ஆட்சி நடத்துவதுபோல் தெரிகிறது என்று கூறினார்.