புனே: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி  மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ள சீரம் நிறுவனத் தலைவர் பூனம்வல்லா, இந்த தடுப்பூசி  90 சதவீத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயார் செய்ய சீரம் நிறுவனம் இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து இந்தியாவின் புனேவில் உள்ள  சீரம் நிறுவனம் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 90 சதவிகிதம் செயல்திறனுடன், இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் AZD1222 ன் மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால பகுப்பாய்வின் நேர்மறையான முடிவுகள் கொரோனா தொற்று பரவலை  தடுப்பதில் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அஸ்ட்ராஜெனெகா  தெரிவித்துள்ளது.

தடுப்பூசி அரை டோஸாக வழங்கப்பட்டபோது ஒரு டோசிங் விதிமுறை 90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது என்று ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது, அதன்பிறகு குறைந்தது ஒரு மாத இடைவெளியில் ஒரு முழு டோஸ். இரண்டு முழு அளவுகள் குறைந்தது ஒரு மாத இடைவெளியில் வழங்கப்படும்போது மற்றொரு வீரியமான விதிமுறை 62 சதவீத செயல்திறனைக் காட்டுகிறது. ஒருங்கிணைந்த பகுப்பாய்வு சராசரியாக 70 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்று அஸ்ட்ராசெனெகா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சோதனை செய்தும், தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார்பூனவல்லா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வைரஸ் தடுப்பூசி  மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் டிவிட் பதிவிட்டுள்ளார்.

மேலும்,   இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய வகையில், இந்த தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ் தயார் செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இலக்கு வைத்துள்ளது என்றும்,   டிசம்பர் மாதத்திற்குள் அரசாங்கத்திடமிருந்து அவசர அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்துஉள்ளார்.

அஸ்ட்ராஜெனெகா திங்களன்று அதன் COVID-19 தடுப்பூசி எந்தவொரு தீவிரமான பக்க விளைவுகளும் இல்லாமல் 90% பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவித்தது, இந்த தடுப்பூசி குறைந்த கட்டண தடுப்பூசி விரைவில் பரவலாகக் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த வாரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த  பூனவல்லா, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் முதல்கட்டகமாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு  2021 பிப்ரவரி மாதத்திலும், ஏப்ரல் மாதத்திற்குள் பொது மக்களுக்கும் கிடைக்க திட்டமிட்டு இருப்பதாகவும்,  இரண்டு டோஸ்களும் சேர்ந்து அதிகபட்சமாக ரூ. 1,000 விலை நிர்ணயிக்கப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.