சென்னை:

தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், தென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடகேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் நிலை கொண்டு உள்ளது என்றும், மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உளளது.

மேலும், கேரள பகுதிகளில் நேற்று வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவகாற்று, இன்று  தென் தமிழகத்தில் வீச தொடங்கி உள்ளதால், தென் தமிழக பகுதிகளில் பருவ மழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த  24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.