சென்னை:

மிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.