வாஷிங்டன்,

மெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரியாக டில்லர்சன் செனட் சபையால் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றார்.

அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுதுறைக்கு ரெக்ஸ் டில்லர்சனை நியமிக்க டிரம்ப் முடிவு செய்தார். அவரது முடிவுக்கு அமெரிக்க செனட் சபையும் அனுமதி அளித்து ரெக்ஸ் டில்லர்சனை வெளியுறத்துறை அமைச்சராக தேர்வு செய்துள்ளது.

அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இ

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப், தனது அமைச்சரவை உறுப்பினர்கள், வெளி நாட்டு தூதர்கள் மற்றும் பல்வேறு ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்களை தேர்வு செய்து நியமனம் செய்து வருகிறார்.

முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சனை(வயது 64) டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

டில்லர்சன், எக்சான் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியாக இருந்தார். அவரது நியமனம் தொடர்பாக செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 56-43 என்ற விகிதத்தில் டில்லர்சன் நியமனம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வெள்ளை மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் முன்னிலையில் டில்லர்சன்  வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த வாய்ப்பினை வழங்கிய அதிபர் டிரம்ப்புக்கு டில்லர்சன் நன்றி தெரிவித்துள்ளார்.