புதுக்கோட்டை:

பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே மனைவியுடன் போனில் பேசிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்  புருஷோத்தமன்.

அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் உள்ள கார் ஷோரூமில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரியுடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சில தினங்களுக்கு சண்முகசுந்தரி தன் தாயார் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு ரோட்டு கடையில் பரோட்டா வாங்கி வந்து புருஷோத்தமன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மனைவி சண்முகசுந்தரி அவருக்கு போன் செய்துள்ளார்.

சாப்பிட்டு கொண்டே பேசிக்கொண்டிருந்த புருஷோத்தமனுக்கு, தொண்டையில் பரோட்டா சிக்கி கொண்டது.

அவரால் எதுவும் பேச முடியவில்லை. மறுபக்கத்தில் இருந்து சண்முகசுந்தரி சத்தம் போட்டும் எந்தவித பயனுமில்லை.

இதனால் பயந்துபோன சண்முகசுந்தரி, அருகே இருந்த தன் உறவினர்களுக்கு போன் செய்து புருஷோத்தமனை போய் பார்க்கும் சொன்னார்.

பூட்டிக்கிடந்த வீட்டை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த புருஷோத்தமனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பரோட்டா சாப்பிட்டு இளைஞர் இறந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிடும் போது பேசியதால், உணவுக் குழாயில் பரோட்டா அடைத்து, மரணம் நிகழ்ந்தி
ருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.