சென்னை:  கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, அக்டோபர் 15ந்தேதி  முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி,
 தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு ஒருவர் அமர வேண்டும்
50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம்
அனைவரும் மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க வேண்டும்
ஒவ்வொரு ஷோ முடிவடைந்த பிறகும்,    தியேட்டர்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்
திரையரங்குகளில் உள்ள கடைகளில்,  பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை மட்டுமே விற்பனை செய்ய வண்டும்.
திரையரங்குகளில் 24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வரை ஏசி அளவை கடைபிடிக்க வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் முறையையே ஊக்கப்படுத்த வேண்டும்.
கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை தியேட்டரில் இடைவெளியின் போது ஒளிபரப்ப வேண்டும்
உள்பட 24 விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.