புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் திருட்டு நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதியில் மினி கிளினிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சி முடிந்த பின் வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் தனியார் மண்டபம் ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாப்பிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய பலர் முயன்று உள்ளனனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெங்கம்மாள் என்ற மூதாட்டியின் காதணியை காதோடு மர்ம் நபர் ஒருவர் அறுத்து சென்றுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மூதாட்டியின் காதை அறுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.