சென்னை: தேனி ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னியை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி, தேனி ஆட்சியராக பணியாற்றி வந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேனி மாவட்ட புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டு உள்ளது.