சேலம்:

திமுகவில் கோஷ்டி பூசல் இல்லை இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இன்று சேலம் எடப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டியில் நடந்த அரசு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,   நேற்று நடந்த மேம்பாலம் திறப்பு விழாவில் வேண்டும் என்றே குற்றம் சாட்டு வதற்காக திமுகவினர் கலந்து கொண்டார்கள் என்று கூறியவர், தேவையில்லாத இடத்தில் பாலத்தை கட்டிக் கொடுத்ததாக சொல்லியிருக்கின்றார்கள். எந்த இடத்தில் தேவையில்லாத பாலம் கட்டி இருக்கிறோம் என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றவர், கந்தம்பட்டி, அரியானூர், மகுடஞ்சாவடி பிரிவு சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் உயர் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. காட்டமாக தெரிவித்தார்.

நேற்று  திறந்து வைக்கப்பட்ட மேம்பாலத்தை மேலும் அகலமாக இருந்திருக்க வேண்டும் என்று  குற்றம் சாட்டும் சேலம் தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன்,  கட்டிடங்கள் இல்லாத காலி நிலமாக உள்ள பகுதியில் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர் கட்டிடங்கள் நிறைந்த சேலம் மாநகர பகுதியில், கட்டிடங்களை இடிக்க சொல்லி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அகலமான சாலை அமைக்க சொல்வது சரியா?  என்றும் கேள்வி எழுப்பினார்.

ராஜன் செல்லப்பா -அதிமுக எம்எல்ஏ

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம்  ராஜன் செல்லப்பா பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். அ.தி.மு. கவுக்கு ஒரே தலைமை வேண்டும் என்றும், இரண்டு தலைமை தேவையில்லை என்றும் கூறியிருக்கிறாரே என்ற கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க.வில் யாரையும் தலைவர்களாக கருதவில்லை என்றவர், அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டரையும் தலைவராகத்தான் கருதுகிறோம். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. வளர்ச்சியை பார்த்து அ.ம.மு.க.வில் இருந்து படிப்படியாக தொண்டர்கள் அ.தி.மு.க. விற்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். அதிமுகவில் எந்த கோஷ்டி பூசல் இல்லை இல்லை என்றவர்,

பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சம்மந்தப் பட்ட சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த பேட்டியை முழுமையாக படிக்கவில்லை என்றும்,  அதைப் பார்த்த பிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி  10 நாட்களில் ஆட்சி கவிழும், ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும் என்றெல்லாம்  ஆருடம் கூறினார்கள். ஆனால்,  அம்மாவின் அரசு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் கடந்து வெற்றிகரமாக  நடைபெற்று வருகிறது என்றும்,  இந்த ஆட்சி எஞ்சிய காலம் முழுவதும் நீடிக்கும் என்றும் தெரிவித்தவர், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று அம்மாவின் அரசு மீண்டும் அமையும் என்றும் கூறினார்.

தமிழகத்தில்,  உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக  தயாராகி வருவதாகவும், தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.