புதுச்சேரி:

றுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்களுக்கு, அவர்களின் ரேஷன் கார்டுகள் தமிழகம், புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் புதுச்சேரியில் இலவச வழங்கப்படாது என்றும், அதற்குரிய பணம், பயனர்களின் வங்கி கணக்கில்தான் செலுத்தப்படும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிகத்தைபோல, புதுவையிலும் ஏழைகளின்  ரே‌ஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால்,  இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு நடப்பதாகவும், தரமான அரிசி வழங்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தது.

இலவச அரிசி வழங்கும் முறைக்கு மாநில ஆளுநர் கிரண்பேடியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இலவச அரிசி வழங்கப்படுவதில் நடைபெறு முறைகேடு தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விஜிலென்ஸ் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பயனர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கு பதிலாக, அதற்குரிய மானியம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  அமைச்சரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதுவையில் இனி இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்குவது தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறைஅமைச்சக கடிதத்தை மேற்கொள்காட்டி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள தகவலில், மத்திய அரசின் முடிவு வரவேற்க்கதக்கது. இதன்மூலம், அரிசி விநியோகத்தில் ஊழல்முறைகள் தடுக்கப்படும்.

புதுவை அரசு கடந்த 43 மாதங்களில் 17 மாதங்கள் அரிசியாகவும், 10 மாதங்கள் பணமாகவும் வழங்கியுள்ளது. மீதமுள்ள 16 மாதங்கள் மட்டுமே வழங்கவில்லை. மத்திய அரசின் தற்போதைய அரிசிக்கு பதில் பணமாக கொடுக்க வேண்டும் என உத்தரவின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புதுவையில் 20 கிலோ அரிசி வாங்கும் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.3.000 அரசு சார்பில் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாகவும், 10 கிலோ அரிசி வாங்கும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1.500-ம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.