ஈரோடு:
மிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதல்வர் எடப்பாடி கூறினார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது இந்த தகவலை தெரிவித்தார்.
தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று  ஈரோடு  மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அங்கு ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார் ரூ.97.85 கோடி மதிப்பிலான 15-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கோபிச்செட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் , எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா..? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர்,  தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக கூறினார்.
கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, எடப்பாடி தனி மாவட்டமாக உதயமாகும் என தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், இனிமேல் புதிய மாவட்டம் கிடையாது என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல்வர்.
தமிழகத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு தான் தமிழகத்தில்  கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.  கடந்த மார்ச் மாதம்  நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில்  மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை  38 உயர்ந்தது என்பது குறிப்பித்ததக்கது.