டில்லி,

தங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலப்பு திருமணம் குறித்த விவாதம் நடைபெற்றது.

அப்போது லோக்சபாவில்  உறுப்பினர் ஒருவர், ஜாதிகளுக்கு இடையே கலப்பு திருமணம் செய்தால் நிதி உதவி வழங்கப்படுவது போல, மதங்களுக்கு இடையே திருமணம் செய்பவர்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு ‘ மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சர், விஜ்ய சம்ப்லா எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,  ஜாதி பேதத்தை ஒழிக்கும் வகையில், கலப்பு மணம் புரிவோருக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. மணம் புரிபவர்களில் ஒருவர், தலித் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த திருமண உதவியை, 2.5 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை.

அதே போல், மதங்களுக்கு இடையே திருமணம் செய்வோருக்கு, இது போன்ற நிதி உதவி வழங்கும் திட்டமும் ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.