புதுடெல்லி: எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து, நாங்கள் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை என ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரஷித் கான் கூறியுள்ளார்.

அயர்லாந்து அணிக்கெதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்ற பிறகு, தங்களின் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதன்மூலம் அந்த அணியின் சர்வதேச கிரிக்கெட் மதிப்பும் அதிகரித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், முதலில் தங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென இவர் அறிவுறுத்தியுள்ளார். எங்களிடம் அறிவும் திறமையும் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முன்னணிப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவாகியுள்ள ரஷீத் கான், ஐபிஎல் போட்டிகளில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடவுள்ளார்.

– மதுரை மாயாண்டி