மும்பை: மகாராஷ்டிராவில் நகைக்கடையில் கொரோனா முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த மர்ம நபர்கள், 780 கிராம் தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
கொரோனா வைரசால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும்.
இந்த நிலையில், ஒரு கொள்ளை கும்பல் தங்களின் கொள்ளை திட்டத்தை நிறைவேற்ற கொரோனா பாதுகாப்பு கவச உடையை பயன்படுத்தி உள்ளனர். பிபிஇ உடைகளை அணிந்த வந்து மர்ம நபர்கள், சதாரா மாவட்டத்தில் ஒரு நகைக் கடையை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கொள்ளையர்கள் 780 கிராம் தங்கத்துடன் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொள்ளையர்கள் தொப்பிகள், முகமூடிகள், பிளாஸ்டிக் ஜாக்கெட்டுகள் மற்றும் கை-கையுறைகளை அணிந்திருந்தனர். கடை சுவர் வழியாக கொள்ளையர்கள் உடைந்ததாக கடை உரிமையாளர் போலீசாரிடம் தெரிவித்தார்.