சென்னை:

மிழகத்தில் கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மட்டுமே பலியான நிலையில், இன்று ஒரே நாளில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 53 வயதான பெண்மணி   இன்று பிற்பகல் 2.25 மணிக்கு காலமானார். இதை தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தையும் சூறையாடி வருகிறது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 411 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் (51 என்பவர் உயிரிழந்தார். . இவரும் நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்.

இதைத்தொடர்ந்து 3வது நபர் தேனியில் உயிரிழந்துள்ளார். இவருக்கு இன்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.