சென்னை

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் கொரோனாவால் மரணம் அடைந்ததற்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைக் கட்சியின் முகமது யூசுஃப் மாநிலப் பொருளாளர் பதவியை வகித்து வருகிறார்.  இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு முகமது யூசுஃப் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  அவரது மரணம் அரசியல் உலகில் கடும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.  யூசுஃப் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டரில்,

விசிக மாநில பொருளாளர் முகமது யூசுஃப்அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு.  அவருக்கு செம்மாந்த  வீரவணக்கம்

எனப் பதிவிட்டுள்ளார்.