சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் சனாதனத்துக்கு எதிரான திமுக கூட்டணி வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எண்ணிக்கையில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூறப்பட்டதால் திமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.  திமுக அணியில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இன்று தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.   தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கிணங்க வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  எனவே முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகும் எனக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டரில்

”தமிழக தேர்தல்களத்தைச் சனாதன சக்திகளுக்கு எதிராகத் திருப்பியதிலும் தலித்மக்களைப் பெருவாரியாக அதிமுக – பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு முதமையானது

சனாதனிகளை வீழ்த்துவதும் விரட்டியடிப்பதுமே நமக்கான வெற்றி

அறம் சீறும்!

சனானதனம் வீழும்!”

 எனப் பதிவு இட்டுள்ளார்.