திருவள்ளூர்:

வடி மாநகராட்சி உட்பட திருவள்ளூரின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, திருநின்றவூர் பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 13 கிராம பஞ்சாயத்துகளும் புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 7 கிராம பஞ்சாயத்துக்களும், பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்பனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய 9 கிராம பஞ்சாயத்துகளுக்கும், மேலூர், சுப்புரெட்டிப்பாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் மற்றும் வெள்ளிவாயல்சாவடி ஆகிய 9 கிராமப் பஞ்சாயத்துக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.