திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர் ஒருவர், தனக்கு விடுப்பு வேண்டி, உண்மையான காரணத்தை கூறி விடுமுறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அந்த கடிதத்துடன் வகுப்பாசிரியர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8வது வகுப்பு படித்து வருபவர் தீபம். படிப்பில் சுட்டியாகவும், இதுவரை விடுமுறை எடுக்காமலும் பள்ளிக்கு வந்த இந்த மாணவர், சமீபத்தில் ஒருநாள் விடுமுறை கோரி வகுப்பு ஆசிரியருக்கு, விடுப்பு விண்ணப்பம் எழுதியிருந்தார்.
அந்த விண்ணப்பத்தில், தங்களது ஊரில், இரவுமுழுவதும் கபடி விளையாட்டு நடைபெற்றதாகவும், அதை தான், இரவு முழுவதும் கண்டுகளித்தால், உடல் சோர்வாக உள்ளது. எனவே தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டியுள்ளார்.
இதைப்பார்த்த வகுப்பு ஆசிரியர், அந்த மாணவனக்கு விடுப்பு கொடுத்த நிலையில், இதுகுறித்து, தனது சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குறிப்பிட்ட அந்த மாணவனின் தந்தை விஜயராகவன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.