சென்னையில் பிரபல சிறுநீரக நோய் மருத்துவர் ஒருவர், தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு உணவு ஊட்டினார். இது மருத்துவரின் மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளது.

கொரோனாவின் தாக்கம், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு செல்ல முடியாத சூழலை உருவாக்கி உள்ளது.

இந்த சூழலில், பிரபல சிறுநீரகயியல் மருத்துவ நிபுணரான (Nephrologist ) டாக்டர் ஜார்க் ஆபிரகாம் (Dr.Georgie Abraham) தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுநிரக நோயாளிக்கு உணவு ஊட்டும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

நோயாளியின் உறவினர்கள் யாரும் கொரோனா ஊரடங்கு காரணாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதால், மருத்துவரே, அந்த நோயாளிக்கு ஸ்பூன் மூலம் உணவு ஊட்டினார்.

இதைக்கண்ட  நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை ஊரியர்கள், அந்தபிரபல மருத்துவரை வாழ்த்தினர்.

மனிதநேயத்தின் மறுப்பக்கம் டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம் என்து இதன்மூலம் தெரிய வந்துள்ளது…

மக்களிடையே மனிதய நேரம் இனனும் மரணவித்துவிடவில்லை என்பதற்கு இதுவே சான்று…